mumbai tour

இந்தியாவின் பொருளாதார தலைநகரும் இந்தியாவின் பல முக்கிய சுற்றுலாதலங்களையும் தலங்களையும் கொண்ட தூங்கா நகரம் என போற்றப்படும் மராட்டிய மாநிலத்தின் தலைநகரம் மும்பையாகும்.
இந்த மும்பை மாநகருக்கு தினசரி வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் என கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக லட்சத்திற்கும் மேலானோர் தினசரி வந்து செல்கின்றனர். இதில் தமிழர்களும் அடங்குவர்.
இத்தகைய தேவைகளுக்குகாக மும்பை வந்து செல்லும் தமிழர்களின் நலன்கருதி மும்பைத்தமிழன்.காம் தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்துயுள்ளது. இந்த வாய்ப்பை மும்பைக்கு வரும் அனைத்து தமிழர்களும் பயன்படுத்திகொள்ளலாம்.
உங்களது மும்பை பயணத்திற்கு முன்பாக உங்களது கால அட்டவனையை எங்களுக்கு தெரிவித்தல் கட்டணத்துடன் கூடிய உரிய வசதிகள் செய்துதரப்படும்.
விதிமுறைகள்:-
  • தங்கு விடுதிகளுக்கு கட்டணம் முன்னமாகவே எங்களுக்கு வங்கி மூலமாகவோ, வரைவு காசோலை மூலமாகவோ, பணஅஞ்சல் மூலமாகவோ, அனுப்பவேண்டும். சாப்பாடு மற்றும் இதர செலவுகள் இதில் அடங்காது.
  • உதவியாளர் தேவை என்றால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 கட்டி உதவியாளர் சேவையை பெற்று கொள்ளலாம்.
  • மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
  • மும்பை வருவதற்க்கான நோக்கத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
  • பணம் பெற்றதற்கான ரசீது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
  • முன்பணம் திருப்பி தரப்படமாட்டாது.
  • வேலை தேடி வருபவர்களுக்கு உதவியாளர் கட்டணம் இலவசம், புகைப்பட சான்று, ஊர் இருப்பிட சான்று கட்டாயம் தேவை.
  • உயர் கல்வி சம்பந்தமான பணிகளுக்கு வருபவர்களுக்கு உதவியாளர் கட்டணம் இலவசம். கல்விநிலைய அடையாள அட்டை மற்றும் இருப்பிட சான்று நகல் கட்டம் தேவை.
  • மேலும் விவரங்களுக்கு அழையுங்கள்

வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் கவனத்திற்கு...

வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் கவனத்திற்கு...
   மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் இரயில் வண்டிகளில் பயணம் செய்யும் வள்ளியூர் சுற்று வட்டார மக்கள் அறிவது என்னவென்றால் மும்பையிலிருந்து வள்ளியூர் வரை பயணம் செய்யும் மக்கள் யாவரையும் பார்த்தல் பெரும்பாலனோர் பயணசீட்டு நாகர்கோவில் வரை எடுத்துள்ளார்கள். ஏன் என்று கேட்டால் வள்ளியூருக்கும் நாகர்கோவிலுக்கும் ஒரு நான்கு ரூபாய் தானே வித்தியாசம் அதனால் என்ன என்று சொல்லுகிறார்கள். அந்த நான்கு ரூபாய் உங்களுக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும் நான்கு ரூபாயை பெரிது படுத்தாமல் கடைசி நிறுத்தம் நாகர்கோவில்  வரை  பயண சீட்டு பெறுகிறார்கள். அதனால் வள்ளியூரில் நாள் ஒன்றுக்கு இறங்கி ஏறும் மக்கள் கணக்கு சரியான முறையில் இரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவருவதில்லை. வள்ளியூர் முதல் மும்பை, மும்பை முதல் வள்ளியூர் என்று பயணசீட்டு வாங்கினால் மட்டும் வள்ளியூரில்  இருந்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை சரியான முறையில் இரயில்வே நிர்வாகத்திற்கு தெரியவரும். இதனால் வள்ளியூரில் இரயில் நிலையத்தில் கணிணி முன்பதிவு நிறுவுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் பின் சுற்று வட்டார மக்கள் முன்பதிவு செய்ய நாகர்கோவில், திருநெல்வேலி என அலைய வேண்டிய நிலை மாறும். இவ்வழியாக செல்லும் அனைத்து வண்டிகளும் வள்ளியூரில் நின்று செல்ல வாய்ப்புள்ளது.  இக்கருத்தை  மனதில் கொண்டு இனி வள்ளியூர் செல்ல அல்லது வள்ளியூரில் இருந்து மும்பை வர முன்பதிவு செய்யும் போது வள்ளியூர் வரை அல்லது வள்ளியூரில் இருந்து முன்பதிவு செய்தால் நன்மையே வந்து சேரும் என்பது மும்பைதமிழனின் தாழ்மையான கருத்து