கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று இந்தியர்களால் பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை, ஆவணி (ஷ்ராவண) மாசத்தின் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி கொண்டாடும் விதிகளின் படி, சிராவண மாஸ பகுளாஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் ஹரிஷண யோகம் ரிஷப லக்னம் சேர்ந்ததே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இதற்கு சான்றாக சூரிய சித்தாந்தம் என்ற புண்ணிய நூலில் கலியுகம் கி.மு.17 பிப்ரவரி 3102 அன்று மதியத்திலிருந்து துவங்கியதாகக் கூறப்படுகிறது. பாகவதத்தில் பிரம்மன் கூறியுள்ளபடி பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் 125 வருடங்கள் (கி.மு.3228 வரை) வாழ்ந்ததாகத் தெரிகிறது.
யதுவம்ஷோ(அ)வதீர்ணஸ்ய பவத புருஷோத்தம ஷரச்சந்தம் வ்யதீயாய பஞ்சகிம்ஷாதிகம் ப்ரபோ (பாகவதம் - 11/6/2)
இதனடிப்படையில் சரியாக கணக்கிட்டால் பகவான் கிருஷ்ணர் இன்றிலிருந்து 5227 வருடங்களுக்கு முன் அவதாரங்கண்டார். அதாவது கி.மு.19 ஜூலை 3228 ஆம் ஆண்டு, சிராவண மாதம் தேய்பிறை எட்டாம் நாள் (பகுள அஷ்டமி) அன்று நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
எப்படி வழிபடுவது?
பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது.
அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
நிவேதனங்கள்
பிரப்பம் பழம், நாவல் பழம்
அவல்
வெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்
நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்
அப்பம்
தட்டை
வெல்லச் சீடை
உப்புச் சீடை
முள்ளு முறுக்கு
முறுக்கு
கோகுலாஷ்டமி கொண்டாடும் விதிகளின் படி, சிராவண மாஸ பகுளாஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் ஹரிஷண யோகம் ரிஷப லக்னம் சேர்ந்ததே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இதற்கு சான்றாக சூரிய சித்தாந்தம் என்ற புண்ணிய நூலில் கலியுகம் கி.மு.17 பிப்ரவரி 3102 அன்று மதியத்திலிருந்து துவங்கியதாகக் கூறப்படுகிறது. பாகவதத்தில் பிரம்மன் கூறியுள்ளபடி பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் 125 வருடங்கள் (கி.மு.3228 வரை) வாழ்ந்ததாகத் தெரிகிறது.
யதுவம்ஷோ(அ)வதீர்ணஸ்ய பவத புருஷோத்தம ஷரச்சந்தம் வ்யதீயாய பஞ்சகிம்ஷாதிகம் ப்ரபோ (பாகவதம் - 11/6/2)
இதனடிப்படையில் சரியாக கணக்கிட்டால் பகவான் கிருஷ்ணர் இன்றிலிருந்து 5227 வருடங்களுக்கு முன் அவதாரங்கண்டார். அதாவது கி.மு.19 ஜூலை 3228 ஆம் ஆண்டு, சிராவண மாதம் தேய்பிறை எட்டாம் நாள் (பகுள அஷ்டமி) அன்று நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
எப்படி வழிபடுவது?
பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது.
அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
நிவேதனங்கள்
பிரப்பம் பழம், நாவல் பழம்
அவல்
வெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்
நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்
அப்பம்
தட்டை
வெல்லச் சீடை
உப்புச் சீடை
முள்ளு முறுக்கு
முறுக்கு

No comments:
Post a Comment