ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | |
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் | |
|---|---|
| பதவியில் ஜூலை 25, 2002 – ஜூலை 25, 2007 | |
| உதவி தலைவர் | பைரோன் சிங் செகாவத் |
| முன்னவர் | கே. ஆர். நாராயணன் |
| பின்வந்தவர் | பிரதிபா பாட்டீல் |
| பிறப்பு | அக்டோபர் 15, 1931 [1] இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா |
| வாழ்க்கைத் துணை | திருமணம் புரியவில்லை |
| சமயம் | இசுலாம் |
பொருளடக்கம் |
வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்ற தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஆ ப ஜே அப்துல்கலாம் அவர்களை அழைக்கவில்லை என்று வினா வருந்தினார்கள்.
தமிழக அளவில் உள்ள அனைத்து மைய, மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கியமானவர்கள், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைக்கப் பட்டனர். ஆனால் அப்துல் கலாம் வரவில்லை, அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன..
அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்த போது குறித்து மாநாட்டுப் பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்தனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் ஊடகங்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
விருதுகள்
இந்திய அரசு இவருக்கு வழங்கி உயரிய விருதுகள் : பத்மா பூஷன் (1981), பத்மா விபூஷன் (1990), பாரத் ரத்னா (1997).எழுதியுள்ள நூல்கள்
- அக்னிச் சிறகுகள்
- எழுச்சித் தீபங்கள்
- இந்தியா 2020
- இந்தியா 2010
- அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
No comments:
Post a Comment