Jebamani Devadasan

 " நல்லாசிரியர்" ஜெபமணி  தேவதாசன்              
           நெல்லை மாவட்டம் , ராதாபுரம் தாலுகா , வடக்கு வேப்பிலாங்குளம் ஊரை சேர்ந்த தேவதாசன் மற்றும் செல்லவடிவு தம்பதியரின் மகன் ஜெபமணி தேவதாசன் ஆவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 1986 ஆம் ஆண்டு தன் மேல்நிலை படிப்பை முடித்துவிட்டு மும்பை முலுண்டில் இருந்த தன் அண்ணன் வீட்டிற்க்கு வந்தார். பின் ஓராண்டுகாலம் இரும்பாலை ஒன்றில் பணியமர்ந்தார். கல்வி மீதிருந்த தீராத தாகத்தால் மீண்டும் தன் படிப்பை தொடர உதவுமாறு அண்ணனிடம் கேட்டுள்ளார். தம்பியின் கல்வி பசியை புரிந்துகொண்ட அண்ணன் அவரை ஊருக்கு அனுப்பி மேற்படிப்பிற்கான ஏற்பாடுகளை செய்து கல்விக்கான செலவையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சொந்த ஊரில் உள்ள TDTA பள்ளியில் ஆசிரியராக தன் பணியை துவங்கினர். 1992-93 ஆம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்தார். பின்னர் மீண்டும் மும்பைக்கு வந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் மாதுங்காவில் உள்ள கே.சி.முனிசிபல் பள்ளியில் ஆறாம்வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார். சுமார் ஐந்து ஆண்டுகாலம் அங்கு பணிபுரிந்த அவர் பள்ளி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிமாற்றம் செய்யப்பட்டர். இங்கும் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் காட்கோபர் ஜெயந்திலால் பள்ளிக்கு மற்றம் செய்யப்பட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டுவரை ஓராசிரியர் பள்ளியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மாநகராட்சி அப்பள்ளியை மூடிவிட முடிவு செய்தது. ஏற்கனேவே மும்பையில் தமிழ்வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள் மிகக்குறைவு. அதிலும் இருக்கும் பள்ளியும் மூடிவிட்டால் மாணவர்கள் கல்வி கற்க நெடுந்தூரம் பயணிக்கவேண்டிவரும் என்பதினை மனதில்கொண்டு பணிநேரம் போக மீதம் உள்ள நேரத்தில் காட்கோபர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளின் கல்வி அவசியத்தினை எடுத்து கூறி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொண்டார். பெற்றோரும் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயந்தது. பள்ளியை மூடிவிட திட்டமிட்டிருந்த மாநகராட்சி மாணவர்களின் எண்ணிக்கை உயந்ததை அடுத்து அந்ததிட்டதினை கைவிட்டது. ஓராசிரியர் பள்ளியாக இருந்ததை ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தியது. ஜெயந்திலால் பள்ளியின் தரம் உயர்வதற்கு முழுகாரணமாக இருந்தது ஜெபமணி ஆசிரியரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே என்றால் மிகையாகது. மூடுவதற்கு தயராக இருந்த ஒருபள்ளியை முடவிடாமல் தடுத்து மட்டுமின்றி அதன் தரம் உயர்வதற்கும் காரணமாக இருந்ததை பாராட்டி விக்ரோலி தாகூர் நகர் மாநகராட்சி பள்ளிக்கு 2006 ஆம் ஆண்டு மற்றம் செய்யப்பட்டார். அதன்பின் மும்பை மட்டுமல்லாது அதன் சுற்று புறத்தில் உள்ள புறநகர் பகுதிகளுக்கும் சென்று தமிழ் மக்களை சந்தித்து தம் பிள்ளைகளின் கல்வியறிவு அவசியத்தை எடுத்துரைத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தார். பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு நன்கொடைகள், சீருடை, மற்றும் ஏடுகள் கிடைக்க பெரிதும் பாடுப்பட்டார். தனக்கு தெரிந்த, தெரியாத புரவலர்களை சந்தித்து ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுமாறு கேட்டு அதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்விகற்க வழிசெய்தார். தாகூர் நகர் பள்ளியில் புரவலர் ஒருவர் மூலம் 27  ஏழை மாணவர்களுக்கு உதவிசெய்து வருகிறது. உதவி பெரும் மாணக்கர்களில் பெண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் உயர்கல்விக்கும் வழி செய்து கொடுக்கின்றனர். அத்திட்டதினையும் இடைவிடாமல் தொடர செய்தார். 20- ஆண்டுகால ஆசிரியர் பணியை செம்மையாகவும் சிறப்பாகவும் செய்ததினை பாராட்டி 13/09/2011 அன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் பணிமட்டுமல்லது இறைபணியிலும் , சமூகபணியிலும் நட்டம் ஜெபமணி ஆசிரியர் தன்வாழ்வில் பெரும்பாலான நேரத்தினை ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்வதிலேயே திருப்பதி கண்டார். "தன் இந்தளவுக்கு முன்னேறி இருப்பதற்கும் நல்லாசிரியர் விருது பெற்றதற்கும் காரணமாக இருந்தது தன் அண்ணன் செல்லதுரையே ஆவர். அவர் மட்டும் என் உயர்கல்விக்கு உதவி செய்யாவிட்டால் தான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது. " என்று கூறி மனம் நெகிழ்கிறார் ஜெபமணி நல்லாசிரியர், இவருடைய துணைவியரும் மழலைகள் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 
                ஏழை எளிய குழந்தைகளும் கல்விகற்க பெரிதும் உதவியாக இருக்கும் ஜெபமணி ஆசிரியருக்கும், அவர்போன்று இன்னும் முகம்காட்டமல் உதவும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்  மும்பைதமிழனின் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகள். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நல் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை பிராத்திக்கிறோம்.
  என்றென்றும் நன்றியுடன் 
மும்பைதமின்.காம்

No comments:

Post a Comment